துத்தி கீரையின் மருத்துவ பயன்கள் 1.மலச்சிக்கல் சிலருக்கு மலம் கழிக்கும்போது ஆசனவாயில் கடுப்பு மற்றும் எரிச்சலுடன் கூடிய வழி இருக்கும். இவர்கள் துத்தி கீரையை ஒரு கைப்பிடி எடுத்து, அதை நூறு மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து பால், பணங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வலி குறைந்து நல்ல பலன் கிடைக்கும் மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்தி கீரையை நன்கு சுத்தமாக கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை என்பது இருக்கவே இருக்காது. 2.மூல நோய் பொதுவாக துத்தி இலையை கிடைக்கும் பொழுது நிலர் படாமல் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். இந்தப் பொடியை தொடர்ந்து காலை மாலை ஒரு டிஸ்புன் தூளை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மூலப் புண்கள், மூலகடுப்பு போன்ற நோய்கள் முற்றிலும் நீங்கி விடும். மூலநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான மருத்துவம் எடுத்துக் கொள்வது மிக அவசியம். இதற்கு துத்தி இலையை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி மூலத்தில் கட்டி வந்தால் மூலத்தில் உள்ள வீக்கம், வலி மற்றும் எரிச்சல் முற்றிலும் நீங்கும். 3.பு...